நிந்தவூரைச் சேர்ந்த கலாநிதி சபீனா கஸ்ஸாலி பீடாதிபதியாகத் தெரிவு.!
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ திணைக்கள துறைத் தலைவராகவும், சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றி வரும் கலாநிதி சபீனா கஸ்ஸாலி தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக, முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் நிந்தவூரின் முதலாவது பெண் பீடாதிபதி யாகவும் இவரே வரலாற்றில் இடம்பிடிக்கிறார்.
நிந்தவூரின் முதலாவது பெண் பீடாதிபதியான உங்களை, News Time இணைய செய்திச் சேவை தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது.






No comments