இளைஞரொருவர் நீரில் மூழ்கி மரணம்!
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் குளிக்கச் சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (7) மாலை இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா பைசல்நகர் தாமரைவில் பகுதியைச் சேர்ந்த 18 வயதான மௌஜுத் பர்ஸான் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நான்கு இளைஞர்கள் கடலில் குளிப்பதற்காக சென்ற போது அதில் ஒருவர் நீந்த முடியாத நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவரது சடலம் பொதுமக்கள், மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் மரண விசாரணைகள் இடம்பெற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.







No comments