நமக்குள் நம்மை தேடுவோம்!
நமக்குள் பிரிவினை வேண்டாம்!
நமது மார்க்கமும்!
நமது மூதாதையரும்
கற்றுத்தந்த
வரலாற்றுப் பாடம் என்ன?
துரோகம்,சூழ்ச்சி கலந்த
சுயநல அரக்கரகளால்
அடிமையாக்கப்பட்டோம்!
சுத்தமான காற்றைத்
தேடுகிறோம்
ஈமானை அசுத்தமாக வைத்துக் கொண்டு!
நிம்மதிக்காக தினம்
போராடுகிறோம்!
மற்றவனின் தூக்கத்தை
திருடுவிட்டு!
உரிமைக்காக குரலை
உயர்த்துகிறோம்!
அடுத்தவன் முதுகில் குத்திக்
கொண்டு!
சுத்தப்படுத்துவோம்!
தேவையெனில்
அப்புறப்படுத்துவோம்!
நமது மண்
நமக்கான மண்!
விழுவதும்! விடுவதும்
நாமாக இருக்க வேண்டும்
நாளை!






No comments