ஊடகவியலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு.
(கியாஸ் ஷாபி)
சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் திருகோணமலை மாவட்டப் பணிப்பாளர்,செயலாளர் மற்றும் பிரதேச இணைப்பாளர்களுக்கான நியமனக்கடிதம், மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நேற்று (14) கிண்ணியாவில் நடைபெற்றது.
சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் திருகோணமலை மாவட்டப் பணிப்பாளர் ஆர்.சதாத் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் அதிதிகளாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம். நிகார், சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் தேசிய செயலாளர் ஐ.பெளர்டீன் மற்றும் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத் தலைவர் கியாஸ் ஷாபி ஆரியோர் கலந்து சிறப்பித்தனர்.












No comments