வாஹித் சேர் காலமானார்.
குச்சவெளியை பிறப்பிடமாகவும் கிண்ணியாவை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது இஸ்மாயில் அப்துல் வாஹித் (வயது 64),(ஓய்வுபெற்ற கிண்ணியா மத்திய கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர்) 14/06/2021 ஆம் திகதி காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் சித்தி சபினா என்பவரின் (இஸ்லாம், அரபு பாட ஆசிரியை இஹ்சானியா ) அன்புக் கணவரும் ஷபீன், அஜீமா, அஜீம் ஆகியோரின் அன்புத் தந்தையும் முகம்மது பரீத் நபீல் (பொறியியலாளர்), ரபீக் ரிப்கா (காத்தான்குடி), முஹம்மது நசார் இனாறா ஆகியோரின் அன்பு மாமனாரும்
காலம்சென்ற முகம்மது பரீட் , அசனார் ரபீக் (ஓய்வு பெற்ற ஆசிரியர் காத்தான்குடி), அபூபக்கர் முஹம்மது நசார் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) ஆகியோரின் சம்மந்தரும் ஆவார்.
நல்லடக்கம் 9:00 குச்சவெளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல், மகன் ஷபீன்
அன்னாரின் சுவன வாழ்வுக்கு நாங்களும் பிரார்த்திக்கின்றோம். News Time Tamil
எமது முகநூல் பக்கத்தை Like செய்து கொள்ளுங்கள்
https://www.facebook.com/newstimetamil/






No comments