Breaking News

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கான காரணத்தை வெளியிட்டது அரசாங்கம்.


எரிபொருள் விலையை அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானமானது தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்றின் ஒரு பிரதான காரணியாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் பிரதமர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் பங்கேற்பில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு குழுவில் இது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.



No comments