Breaking News

பிரதமரினால் மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைப்பு



கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிடைக்கப்பெற்ற பல மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (19) பிற்பகல் தெபருவ மற்றும் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் தலையீட்டில் இந்த உபகரணத் தொகுதி வழங்கிவைக்கப்பட்டது.

தெபருவ ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வசந்த விஜேவீர  மற்றும் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வருகைத்தந்த எம்.எம்.சீ.கயான் ஆகியோர் குறியீட்டு ரீதியாக பிரதமரிடமிருந்து மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்டனர்.

முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் 30 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அண்மையில் பிரதமரிடம் கையளிக்கப்பட்டன. அவ்வாறு கையளிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களின் ஒரு தொகுதியே இவ்வாறு தெபருவ மற்றும் வலஸ்முல்ல வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டது.

வயோதிபர்கள் மற்றும் சிறுவர்களுக்காக பயன்படுத்தக்கூடிய வென்டிலேட்டர் (Ventilators), ஒக்சிஜன் கருவிகள்(Oxygen therapy), பீ.பீ.ஈ. (PPE) கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அதில் உள்ளடங்கும்.  www.newstimetamil.com

குறித்த நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், இலத்திரனியல் தொழில்நுட்ப மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சருமான கௌரவ நாமல் ராஜபக்ஷ, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு


No comments