Breaking News

யாழ்ப்பாணத்தில் சுற்றவளைப்பு


யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் இன்றைய தினம் (15) யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, கோப்பாய், திருநெல்வேலி, கோண்டாவில் ஆகிய பிரதேசங்களில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.



தன்போது வர்த்தக நிலையங்களும் பரிசோதனை செய்யப்பட்டன. அத்தோடு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டதுடன் சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

No comments