கிண்ணியா பிரதேச சபைக்கு கடைத் தொகுதிகள் நிர்மாணம்!
கிண்ணியா பிரதேச சபைக்கு வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் 10 மில்லியன் ரூபா செலவில் கடைத் தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (3) இடம்பெற்றது.
பிரதேச சபைத் தவிசாளரின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தின் இன்றைய நிகழ்வில், உள்ளூராட்சி அலுவலகத்தின் பொறியியலாளர் கெளரிபாலன், உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தென்னக்கோன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.






No comments