Breaking News

உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு?


நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி அளித்து வர்த்தமானி அறிவிப்பு இன்று (25) நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன..

இந்த வர்த்தமானி அறிவிப்பு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் கையொப்பத்துடன் வெளியிடப்படவுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் உட்பட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில், இந்த வர்த்தமானி அறிவிப்பு சுகாதாரத்துறையின் இறுதி பரிந்துரைக்குப் பின்னர் வழங்கப்பட உள்ளது. கொரோனா அடக்கம் செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக சுகாதாரத் துறைக்கும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையே இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. 

இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே கொரோனா அடக்கம் செய்ய அனுமதி வழங்க சுகாதாரத் துறை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த செய்தியினை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

No comments