ஜனாஸாக்களை அடக்க கிண்ணியாவிலும் இடம்
கொரோனாவினால் மரணமடையும் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான இடம் ஒன்று கிண்ணியாவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிண்ணியா மகாமாறு என்ற பிரதேசத்தில் அமைந்திருக்கும் மையவாடியே இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த இடத்தைப் பார்வையிடுவதற்காக இன்று (05. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. பிரேம் விஜயம் செய்திருந்தார். இவ்வேளையில் பாராளமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் எம். நிஹார், பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ். நஸீர் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.
(www.newstimetIamil.com)






No comments