உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையில் இருந்து......
சந்தேக நபர்களை விடுவிக்க
முஸ்லிம் அரசியல் வாதிகள் அழுத்தம் வழங்கினார்களா?
தொடர் - 7
மாவனல்லை சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலை செய்யப்பட்ட ஒரு சந்தேக நபர் வாழ்ந்த சிறிய குடிசையில் விரைவில் ஒன்று இருந்ததாக ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட சாட்சிகள் மூலம் அறியக் கிடைத்துள்ளது.
சோதனை நடவடிக்கைகளின் போது இரகசிய பொலிஸாருக்கு ஒத்துழைத்த விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் இது கண்டெடுக்கப்பட்டது.
நள்ளிரவில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதால் விபரம் விசேட அதிரடிப்படை அதிகாரி களால் தமது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என இரகசிய பொலிஸாரால் விசாரணை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இன் நிலைமையின் எனக்கு சாகிறான் மற்றும் அவரது குழு மற்றும் SlJlSM உட்பட ஏனைய தவ்ஹீத் குழுக்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தது.
முகம்மத் நபீஸ் முகம்மட் நப்ரித் மற்றும் முகமட் நபீஸ் முகமட் நபீத் மேற்கொண்டிருந்த தொடர்புகள் தொடர்பாக விரிவான விசாரணை ஒன்று உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும் மாவனல்லை சம்பவம் தொடர்பிலான விசாரணையில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தலையீடு செய்தமை உட்பட வணாத்த வில்லுவில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பிலும் விசாரணை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முகம்மத் நபீஸ் முகம்மட் நப்ரித் மற்றும் முகமட் நபீஸ் முகமட் நவீத் ஆகிய இரு சந்தேகநபர்களின் விடுதலைக்காக தான் சம்பந்தப்பட்டதாக அசாத் சாலி கேட்டுக்கொண்டுள்ளார். அவரது தகவல்களின்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் அவருடன் இது தொடர்பில் கலந்துரையாடி உள்ளார்.
2019 ஜனவரி 23ஆம் திகதி பாதுகாப்பு செயலாளருடன் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளதுடன் அப்போது அந்தப் பிரச்சினை சிஐடி பணிப்பாளர் சானி அபேசேகராவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அப்போது அவர், அது பற்றி இப்போது பேச வேண்டாம் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என பதிலளித்துள்ளார். 2019 ஏப்ரல் 9 ஆம் திகதி உத்தரவின்படி அந்த இரு சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாவனல்லை சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தான் தலையீடு செய்வதற்கான காரணத்தை அசாத் சாலி விளக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தனக்கு பல தொலைபேசி அழைப்புகள் கிடைத்ததாகவும் தொலைபேசி அழைப்புகள் கிடைத்ததாகவும் அந்த திகதிகளை தன்னால் உறுதியாக கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் ஆகியோரை தொடர்பு கொண்டு இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்கப்படவேண்டும். தடுக்கப்பட வேண்டும் என தான் உடனடியாக அறிவித்ததாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் ஆராய்வதற்கும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் உதவி செயலாளரும், செய்லன் முஸ்லிம் இளைஞர் அமைப்பின் பணிப்பாளருமான முகமட் சாலி முகமட் தாசிம் செயல்படுவதாாகவும் அவரிடம் மேலும் விவரங்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அசாத் சாலியிடம் தெரிவித்துள்ளார்.
அசாத்சாலி முதலில் தாசிம் மெளலவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திகதியை ஞாபகப்படுத்த இயலாமல் இருந்தது.
சம்பவம் தொடர்பில் வினவியபோது சம்பவத்தின் பின்னணியை இதுவரை அறியவில்லை எனவும் அவர் சம்பவம் தொடர்பில் ஆராய நிலைக்கு பயணமாகி கொண்டிருந்ததாகவும் அசாத் சாலி தெரிவித்தார்
என்றாலும் தாசிம் மெளலவியினால் பிரதே பள்ளிவாயல் மூலம் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அந்த விவரங்கள் அசாத்சாலிக்கு வழங்கப்பட்டது. அவர் உடனடியாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, பாதுகாப்புச் செயலாளர் கேமாசிறி பெர்ணான்டோ ஆகியோரை தொடர்பு கொண்டு கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்யும்படி கூறினார். அந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் தேசிய உளவுப் பிரிவின் பணிப்பாளர் சிசிர மென்டிஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டம் 2019 ஜனவரி மூன்றாம் திகதி அளவில் பாதுகாப்புச் செயலாளரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளிவந்த பல விடயங்கள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் அங்கு கூடியிருந்தவர்களுக்கு விளக்கமளித்தார். தலைமறைவான சந்தேக நபர்கள் இருவரும் தந்தையினால் அவர்கள் இருவரையும் போலிஸில் ஆஜராகுமாறு கோரி வட்ஸ் அப்பில் குரல் பதிவு ஒன்று விடப்பட்டுள்ளதாக தாசிம் மெளலவி வாக்குமூலம் அளித்துள்ளார். (தொடரும்)
www.newstimetamil.com






No comments