கிண்ணியாவில் கட்டாய PCR பரிசோதனை
(கியாஸ் ஷாபி)
கிண்ணியாவில் முக கவசம் அணியாமல் வீதிகளில் நடமாடியோர் பிடிக்கப்பட்டு, கட்டாய PCR பரிசோதனைக்கு இன்று (17) உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது கிண்ணியா பிரதான வீதியில் மக்கள் ஒன்று கூடும் இடங்களில் இன்று காலை 9 மணி தொடக்கம் பகல் 12 மணி வரையும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு PCR பரிசோனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.








No comments