மாகாண சபைத் தேர்தல் எப்போது?
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றிரவு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது மாகாணசபைத் தேர்தல் மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. அதன்பின்னரே கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை தேர்தலை நடத்துவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.






No comments