Breaking News

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக இரண்டு இடங்கள்

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக இரண்டு இடங்களை பரிந்துரை செய்திருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பான அறிக்கை ஒன்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதன்படி மன்னார் மறிச்சுக்கட்டி மற்றும் கிழக்கு இறக்காமம் என இரண்டு பிரதேசங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றன.

இதனிடையில் சுகாதாரதுறையினர் இந்த இரண்டு இடங்களிலும் எந்த இடத்தில் கொரோனாவினால் மரணமாகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய வேண்டும் என தீர்மானிக்க முடியும் என்பதை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் தொடர்ந்தும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் முகமாக கொரோனாவினால் மரணமாகும் உடலங்களை தகனம் செய்வதே சிறந்தது என பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments