Breaking News

கப்பலின் சேதத்தை சரி செய்ய அனுமதி

 


விபத்திற்குள்ளான MV Eurosun கப்பலில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய அக்கப்பலுக்கு சொந்தமான நிறுவனம், சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையிடம் அனுமதி கோரியுள்ளது.

இது குறித்து அவர்கள் தமது அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லங்கந்தபுர தெரிவித்துள்ளார்.

கப்பல் காணப்படும் கடற்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சீற்றம் காரணமாக அப்பகுதியை கண்காணிப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நேற்றைய தினம் ஐவரடங்கிய குழு, குறித்த கடற்பிராந்தியத்திற்கு சென்றதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கூறினார்.


No comments